தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  456.79 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

By செய்திப்பிரிவு

நடப்பு கரீப் பருவச் சந்தைக் காலத்தில் (2020-21), கரீப் பருவப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு டிசம்பர் 27 வரை 456.79 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் கொள்முதலைக் (366.19 இலட்சம் மெட்ரிக் டன்) காட்டிலும் 24.74 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு கரீப் பருவச் சந்தைக் காலத்தில் 56.55 இலட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 86242.83 கோடியைப் பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து 51.66 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 27 வரை 235753.71 மெட்ரிக் டன் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை ரூ.1262.16 கோடி மதிப்பில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 1,27,576 விவசாயிகளிடமிருந்து அரசு தனது முதன்மை முகமைகளின் மூலம் கொள்முதல் செய்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து 1.23 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயைக் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்