ஏ.எம்.நாயக் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

#எல் அண்ட் டி குழும நிறுவனங்களின் தலைவர்.

#1965-ம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜூனியர் என்ஜீனியராக வேலைக்குச் சேர்ந்த இவர் படிப்படியாக உயர்ந்து 1999-ம் ஆண்டு நிறுவனத்தின் சி.இ.ஓவாக உயர்ந்தார்.

#2003-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

#குஜாராத் மாநிலத்தில் உள்ள பிர்லா விஸ்வகர்மா மஹாவித்யாலயா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தவர்.

#சுயசரிதை எழுத வேண்டும் என்று இவரிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்துக்கு Village to World என்று பெயர் வைத்திருக்கிறார். இன்னும் எழுதத் தொடங்கவில்லை.

#மிகக் கடுமையான உழைப்பாளியான இவர், வேலைக்கு சேர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு விடுமுறை எடுத்திருப்பதாக பிஸினஸ் பத்திரிகை கூறுகிறது.

#தனக்கு பிறகு நிறுவனத்துக்கு தலைமைப் பொறுப்புக்கு வரும் தகுதி யாருக்கும் இல்லை என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்திருக்கிறார்.

#ஹார்வேர்ட் பிஸினஸ் ரிவ்யூ, என்.டி.டி.வி., சி.என்.பி.சி., எர்னஸ்ட் அண்ட் யங், எகனாமிக் டைம்ஸ், இன்சீட் (INSEAD) உள்ளிட்ட பல அமைப்புகள் இவருக்கு விருது வழங்கியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

46 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்