பங்குச்சந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத நிகழ்வாக ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1127 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் தேக்க நிலை நீடித்து வந்தது. பின்னர் இந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் கடும் சரிவை சந்தித்தன.
இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது ஏற்றம் காணப்பட்டது. எனினும் பிற்பகலில் திடீரென பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் அதிரடியாக 1127 புள்ளிகள் அதலபாதாள வீழ்ச்சி கண்டது. குறிப்பாக யெஸ் பாங்க் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிந்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அடுத்து என்னாகுமோ என்ற கடும் ஏக்கத்துடன் கம்ப்யூட்டர் திரையை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தனர்.
எனினும் சிறிதுநேரத்தில் பங்குச்சந்தை சீராகத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்மாக மீண்டது. சென்செக்ஸ் 900 புள்ளிகள் ஏற்றம் கண்டன. எனினும் முந்தைய நாளை ஒப்பிடுகையில் சுமார் 250 புள்ளிகள் சரிவில் வர்த்தகமானது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
12 hours ago