இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு: ராஜீவ் பன்சாலுக்கு ரூ.12.20 கோடி இழப்பீடு 

By செய்திப்பிரிவு

ராஜீவ் பன்சால்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன் னாள் தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சாலுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் அளிக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த மேல்முறை யீட்டு வழக்கில் இன்ஃபோசிஸ் நிறு வனத்துக்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படை யில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ராஜீவ் பன்சாலுக்கு ரூ.12.20 கோடி நிலுவைத் தொகையை அளிக்க வேண்டியுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தி லிருந்து பன்சால் 2015-ம் ஆண்டில் வெளியேறினார். அவருடன் போடப் பட்ட ஒப்பந்தப்படி அவர் வெளியே றுகையில் 24 மாத சம்பளமான ரூ.17.38 கோடியை நிறுவனம் அவருக்கு அளிக்க வேண்டும். முதல் தவணையாக ரூ. 5 கோடி கொடுக்கப்பட்டது. பின்னர் பன்சால் நிறுவனத்துக்கு அளித்த இலக்குகளை எட்டவில்லை என மீதித் தொகையை அளிப்பதை இன்ஃபோசிஸ் நிறுத்தி வைத்தது. இதனை எதிர்த்து ராஜீவ் பன்சால் நிறுவனங்கள் தீர்பாயத்தை அணுகினார்.

தற்போது தீர்ப்பாயம் வழங்கி யுள்ள உத்தரவில், பன்சாலுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.12.17 கோடியை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள் அறிக் கையில், பன்சால் வெளியேற்ற கட்டணம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில் அவரது பணிக்கால ஒப்பந்தப்படி ஏற்கெனவே ரூ. 5.2 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

அதேநேரத்தில் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மீறியதற்காக பன்சால் மீது ரூ.100 கோடிக்கு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. நிறு வனத்தின் அதிகாரபூர்வ தகவல் திரட்டுகளில் இருந்து சில தகவல்களை பன்சால் நீக்கியதால் அவரது வெளியேறும் தொகை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் அறிந்தவர்கள் கூறினர்.

நீதிபதி ஆர் வி ரவீந்திரன் முன்பு நடைபெற்ற, இரு தரப்புக்குமான விசாரணை ஆகஸ்ட் மாதம் முடிவ டைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டு களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

பன்சாலுக்கு வெளியேறும் கட்ட ணம் வழங்குவதற்கு நிறுவனர் நாராணயமூர்த்தி கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். இத னையடுத்து மேலும் சில விவ காரங்களில் நிறுவனர்களுக்கும் இயக்குநர் குழுவுக்கும் இடையே பொதுவெளியில் கடுமையான வார்த்தை யுத்தம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

29 mins ago

க்ரைம்

33 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்