மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதிக்கப்பட்டதால் அதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பங்குச்சந்தை சார்ந்த நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வரியின் மூலம் அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவடைந்தது. எனினும் பின்னர் சீரடைந்தது. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு அதிகமான வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடன் சரிவடைந்த பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டது.
இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து, 35,906 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதுபோலவே, தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 11,016 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
10 hours ago