உசிலம்பட்டியில் சுட்டெரிக்கும் வெயிலில் உதவிக்கு ஆள் இல்லாமல் வந்து வாக்களித்த 91 வயது மூதாட்டி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

உசிலம்பட்டியில் 90 வயது மூதாட்டி ஒருவர், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைs சேர்ந்தவர் சரஸ்வதி. 91 வயது மூதாட்டியான. இவர் உசிலம்பட்டி டிஎல்எஸ் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.

அவர் சுட்டெரிக்கும் வெயிலில் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உதவிக்கு ஆள் இல்லாமல் வந்தார். இருப்பினும் பொறுப்புடன் முகக்கவசம் அணிந்து வந்தார்.

அவர் தனியாக வாக்குச்சாவடிக்கு வந்ததால், வாக்குச்சாவடியில் உதவிக்கு நின்றுக்கொண்டிருந்தவர்கள் ஓடிச் சென்று உதவ முயன்றார்கள். ஆனால், அவரோ நானே வந்துவிடுவேன் என்றார்.

ஆனாலும், வாக்குச்சாவடி மையம் படிக்கட்டுகளுடன் உயரமாக இருந்ததால் அவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக படிகள் ஏறிவந்து வாக்களித்தார்.

அவர் கூறுகையில், ‘‘எனக்கு பிள்ளைகள் யாரும் இல்லை. ஒரே மகன் இருந்தான். அவனும் தீ விபத்து ஒன்றில் இறந்துவிட்டான். ரூ.35 இருக்கம்போது இருந்தே அரசு உதவித்தொகை வாங்கிறேன். இப்போது ரூ.1,000 வாங்குகிறேன். ஒரு தேர்தலிலும் நான் வாக்களிக்காமல் இருந்ததில்லை. இந்த முறையும் காலையிலேயே வாக்களிக்க வந்துவிட்டேன், ’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்