மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 1 முதல் 7-ம் தேதி  வரை) 

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் மாறும். நண்பர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள்.
தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த கலைஞர்களுக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகும். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

வியாழன்-
பயணங்கள் அதிகமாக ஏற்படும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தூரத்து உறவினர் ஒருவரால் பண உதவிகள் கிடைக்கும்.

சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும்.

ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபார ஒப்பந்தம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். திருமணத் தேதி முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகப்பெருமானை வணங்குங்கள்.விநாயகர் அகவலை பாராயணம் செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும், நினைத்தது நிறைவேறும்.
***********************************


பூரம்-
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் திடீர் பணவரவு போன்றவை உண்டாகும். உறுப்பினர்களின் சுவிசேஷ காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன்-
சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

வியாழன்-
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும்.

சனி-
தொலைபேசி வழித் தகவல் மனநிறைவைத் தரும். நீண்ட நாளாக முடியாமல் இருந்த வியாபார விஷயங்கள் இன்று சுமுகமாக முடிவடையும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். அடகு நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

ஞாயிறு-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. முக்கியமான சந்திப்புகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். கடன் கொடுப்பது அல்லது கடனை அடைப்பது இன்று செய்ய வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சக்தி வடிவான அம்மனை வழிபடுங்கள். அதிக நன்மைகள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதி உண்டாகும்.
**********************************************


உத்திரம்-
நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

செவ்வாய்-
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.

புதன்-
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் அதிக அளவில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்-
அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மற்றவர்களால் ஒருசில தொந்தரவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மன உளைச்சல் உண்டாகும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.

சனி-
சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது தொடர்பாக மருத்துவச் செலவுகளும் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு-
பணத்தேவைகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தருவார்கள். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்