மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; (மே 21 முதல் 27-ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும்.


ராசிக்கு 11ல் பாதக ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாயால் எந்த ஒரு வேலையைப் பற்றியும் அதிகம் யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பணத்தேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.


குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.


தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
பெண்களுக்கு வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.


அரசியல்வாதிகளுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: செவ்வாய்க் கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். மனதில் தைரியம் உண்டாகும்.
************************************************


ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம்.


புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ராசிக்கு 2ல் ராசிநாதன் சஞ்சாரம் இருப்பதால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதையும் திறமையாக சமாளிப்பீர்கள்.
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியன் சஞ்சாரம் பொருள் வரவைத் தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.


குடும்பத்தில் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும்.
உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.
பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சினையிலும் சாதகமான முடிவைப் பெறுவீர்கள்.


கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை - சிவப்பு
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபடுங்கள். வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெறுங்கள். எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும். தொழில் சிறக்கும்.
********************************************


மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே செயலுக்கு வரும்.


சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.


குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.


தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். கலைக்காரகன் சுக்கிரனின் இருப்பால் கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும்.


அரசியல்வாதிகளுக்கு மந்தமான நிலையே காணப்படும். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
திசைகள்: வடக்கு, மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் படித்து வர, எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்