திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சூரசம்ஹாரம் - போட்டோ ஸ்டோரி
Published on : 18 Nov 2023 20:14 pm
1 / 6
![மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை மாலையில் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/18/4030/thumb/xyz17003186711.jpg)
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை மாலையில் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
2 / 6
![மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டிவிழா நவ.13ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் காலை மாலையில் சண்முகார்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/18/4030/thumb/xyz17003186712.jpg)
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டிவிழா நவ.13ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் காலை மாலையில் சண்முகார்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
3 / 6
![ஆறாம் திருநாளான இன்று காலையில் யாகசாலை பூஜை முடிந்து, உச்சிகால பூஜை முடிந்த பின்னர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத்தேவரும் கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை 4 மணிக்கு தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/18/4030/thumb/xyz17003186713.jpg)
ஆறாம் திருநாளான இன்று காலையில் யாகசாலை பூஜை முடிந்து, உச்சிகால பூஜை முடிந்த பின்னர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத்தேவரும் கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை 4 மணிக்கு தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர்.
4 / 6
![அசுரர்களை வதம் செய்வதற்கு புறப்பட்டு சன்னதி வீதியில் சொக்கநாதர் கோயில் முன்பாக தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத் தேவரும் எழுந்தருளினர். பின்னர் மாலை 6 மணியளவில் பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/18/4030/thumb/xyz17003186714.jpg)
அசுரர்களை வதம் செய்வதற்கு புறப்பட்டு சன்னதி வீதியில் சொக்கநாதர் கோயில் முன்பாக தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத் தேவரும் எழுந்தருளினர். பின்னர் மாலை 6 மணியளவில் பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
5 / 6
![பின்னர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து மாலை மாற்றிக்கொண்டனர். தீபாராதனை முடிந்து சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து (நவ.19) தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/18/4030/thumb/xyz17003186715.jpg)
பின்னர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் முடிந்து மாலை மாற்றிக்கொண்டனர். தீபாராதனை முடிந்து சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து (நவ.19) தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
6 / 6
![தகவல்: ஜனநாயக செல்வம் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/18/4030/thumb/xyz17003186716.jpg)
தகவல்: ஜனநாயக செல்வம் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி