Published on : 04 May 2024 14:26 pm

வற்றிய பவானிசாகர் அணை... வெளிப்பட்ட ‘டணாய்க்கன்’ கோட்டை! - போட்டோ ஸ்டோரி

Published on : 04 May 2024 14:26 pm

1 / 7

பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 3.39 டிஎம்சியாக சரிந்துள்ள நிலையில், நீர்த்தேக்க நீரில் மறைந்திருந்த டணாய்க்கன் கோட்டை மற்றும் மாதவராயப் பெருமாள் கோயில் தெரிகிறது. | செய்தி: எஸ்.கோவிந்தராஜ் | படங்கள்: என்.கோவிந்தன்

2 / 7

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில், பவானி ஆறும், மாயாறும் கூடும் இடத்தில், பவானிசாகர் அணை (கீழ்பவானி அணை) கட்டும் பணி 1948-ம் ஆண்டு தொடங்கியது. இதனால் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட கிராம மக்கள், பண்ணாரி வனப்பகுதிக்கு குடியேறினர். இக்கிராம மக்கள் வழிபாடு செய்து வந்த மாதவராய பெருமாள், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள் ‘டணாய்க்கன் கோட்டை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

3 / 7

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்த இந்த கோயில் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டு, கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் புதிய கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பவானிசாகர் அணை கட்டுமானப் பணி, 1955 -ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் அணையில் நீர் தேக்கப்பட்டதால், கற்களால் கட்டப்பட்ட கோயில் மற்றும் மண்டபம் மூழ்கின. தொடர்ந்து நீருக்குள் இருப்பதால், டணாய்க்கன் கோட்டை மற்றும் கோயில் பிரகாரங்கள் சிதிலமடைந்தன.

4 / 7

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையும் போது டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள் வெளியே தெரியும். கடந்த 2018 -ம் ஆண்டு நீர்மட்டம் குறைந்த போது, இந்த கோயில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு 6 ஆண்டுகளாக நீர்மட்டம் குறையாததால், கோயில்கள் தெரியவில்லை.

5 / 7

தற்போது அணையின் நீர்மட்டம் 45 அடியாக சரிந்துள்ளதால், டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக வெளியே தெரிகிறது. பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அணை மீதும் நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 / 7

நீர்வளத்துறை எச்சரிக்கை: மாதவராய பெருமாள் கோயிலுக்கு, சிலர் பரிசல்களில் திருட்டுத்தனமாக சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து நீர்வளத் துறை அதிகாரிகள் சார்பில் அந்தப் பகுதியில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தெரியும் டணாய்க்கன் கோட்டைக்கு பரிசல் மற்றும் இயந்திர படகில் பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அப்பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது. இதை மீறி சென்றால் பரிசல் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையும் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 / 7

Recently Added

More From This Category

x