Published on : 18 Jan 2024 19:29 pm

எப்படி இருக்கிறது 125 அடி உயர அம்பேத்கர் சிலை @ ஆந்திரா - புகைப்படத் தொகுப்பு

Published on : 18 Jan 2024 19:29 pm

1 / 18

விஜயவாடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 125 அடி உயர டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை வெள்ளிக்கிழமை (ஜன.19) திறந்து ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி வைக்கிறார். | படங்கள்: ஜி.என்.ராவ்

2 / 18

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சிலை, அங்குள்ள அம்பேத்கர் ஸ்மிரிதி வனத்தில் 81 அடி பீடத்தின் மேல் 125 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

3 / 18

18.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 404.35 கோடி செலவில் இந்தச் சிலையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

4 / 18

இந்த 125 அடி சிலை எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5 / 18

சிலையின் பீடம், பவுத்த கட்டடிக் கலையின் காலச்சக்கர மண்டலம் போல வடிவமைக்கப்பட்டள்ளன.

6 / 18

பீட பகுதி மட்டும் 11,140 கன மீட்டர் கான்க்ரீடாலும், 1445 மெட்ரிக் டன் டிஎம்டி கம்பிகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இளஞ்சிவப்பு மணல்கற்கள் பூச்சுக்கொண்டுள்ளது.

7 / 18

இந்த நினைவுச் சின்னத்தின் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள் உள்ளன. மையத்தில் ஓர் இசை செயற்கை நீரூற்றும் உள்ளது.

8 / 18

இந்தச் சிலைக்கானத் திட்டதில் 2 ஆண்டுகளாக 55 தொழில்நுட்ப மற்றும் உதவியாளர்களுடன் 500 முதல் 600 ஆட்கள் தினமும் வேலை செய்துள்ளனர்.

9 / 18

சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எக்பிரீயன்ஸ் சென்டர், 2000 பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு அரங்கம், உணவு அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், நீர் நிலைகளை, இசை நீரூற்று, நடைபாதைகள் ஆகியவை அமைந்துள்ளன.

10 / 18

டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் அவரின் வாழ்க்கைத் தொடர்புடைய விஷயங்கள் மின்னணு காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்படும்.

11 / 18

இந்தக் கட்டமைப்பில் அம்பேத்கர் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைபடைப்புகளுடன் கூடிய 166 தூண்கள் உள்ளன.

12 / 18

இந்த திட்டமானது கடந்த 2021 டிச.21-ல் தொடங்கப்பட்டது. முன்னதாக 2023 ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில் திறப்பதாக திட்டமிடப்பட்டது.

13 / 18

இந்த சிலை நிறுவும் பணிகள் ஆந்திரப் பிரதேச அரசின் சமூக நலத் துறையால் மேற்பார்வையிடப்பட்டது. திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக ஆந்திரப் பிரதேசத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் லிமிட் இருந்தது.

14 / 18

திட்டத்துக்கான ஒப்பந்ததாரராக கேபிசி ப்ராஜெக்ட் லிமிட் இருந்தது. இதன் வடிவமைப்பாளராக எம்.எஸ் டிசைன் அசோசியேட்ஸ் நிறுவனம் செயல்பட்டது.

15 / 18

சிலை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே மகுடமாக விளங்கும் இந்தச் சிலை சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம்” என்று வர்ணித்துள்ளார்.

16 / 18
17 / 18
18 / 18

படங்கள்: ஜி.என்.ராவ்

Recently Added

More From This Category

x