செர்னோபில் அருகே ரஷ்ய ஏவுகணைகள்: அணு உலை பேரழிவு எச்சரிக்கை விடுத்தது உக்ரைன்

செர்னோபில் அருகே ரஷ்ய ஏவுகணைகள்: அணு உலை பேரழிவு எச்சரிக்கை விடுத்தது உக்ரைன்
Updated on
1 min read

கீவ்: செர்​னோபில் அணு உலை விபத்​தின் 40-வது ஆண்டு நினைவு தினம் வரும் ஞாயிற்​றுக்​கிழமை அனுசரிக்​கப்பட உள்​ளது.

இந்நிலை​யில், செய்தி நிறு​வனத்​திடம் உக்ரைனின் தலைமை அரசு வழக்​கறிஞர் ருஸ்​லான் கிராவ்​சென்கோ கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2024 ஜூலை முதல் உக்​ரைன் மீது ரஷ்யா தீவிர ட்ரோன் தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது. குறிப்​பாக, செர்​னோபில் அணு உலை​யின் கதிர்​வீச்சு பாது​காப்பு கவசத்​துக்கு 5 கிலோ மீட்​டர் சுற்​றள​வுக்குள் குறைந்​தது 92 ரஷ்ய ட்ரோன்​கள் பறந்​ததை எங்​களது ரேடார்​கள் கண்​டறிந்​துள்​ளன.

உக்​ரைனை அச்​சுறுத்​த​வும், தீவிர​வாதத்தை பரப்பவுமே அணு உலைகளுக்கு மேல் ரஷ்யா இது​போன்று ஏவு​கணை​களை​யும், ட்ரோன்​களை​யும் ஏவி வரு​கிறது. கடந்த 1986-ம் ஆண்டு ஏப்​ரல் 26-ம் தேதி வெடித்​துச் சிதறிய செர்​னோபில்​லின் 4-வது அணு உலை​யி​லிருந்து கதிர்​வீச்சு கசி​யாமல் தடுப்​ப​தற்​காக பிரம்​மாண்ட பாது​காப்பு கவசம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 2025 பிப்​ர​வரி​யில் ட்ரோன் தாக்​கிய​தில் இந்த கவசத்​தின் உள் மற்​றும் வெளி அடுக்​கு​களில் 6 மீட்​டர் விட்​டம் கொண்ட ஓட்டை ஒன்று விழுந்​த​தாகத் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. எனவே, இது மீண்​டும் ஒரு அணு உலை பேரழி​வுக்கு வழி​வகுக்​கும். இவ்​வாறு கிராவ்​சென்​கோ கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து செர்​னோபில் நிலைய இயக்​குநர் செர்ஜி தாரக​னோவ் கூறுகை​யில், "இந்​தக் கட்​டமைப்​பின் அருகே ஏவு​கணை விழுந்​தால் அது ஒரு சிறிய நிலநடுக்​கத்​தையே ஏற்​படுத்​தும். இந்​தப் பாது​காப்பு கவசம் நிலைத்து நிற்​கும் என்​ப​தற்கு எவ்​வித உத்​தர​வாத​மும் இல்​லை" என எச்​சரித்​துள்​ளார்.

செர்னோபில் அருகே ரஷ்ய ஏவுகணைகள்: அணு உலை பேரழிவு எச்சரிக்கை விடுத்தது உக்ரைன்
30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in