இலங்கை சிறையில் மீண்டும் கைதிகள் மோதல்: 26 பேர் உயிரிழப்பு; 100+ காயம்

இலங்கை சிறையில் மீண்டும் கைதிகள் மோதல்: 26 பேர் உயிரிழப்பு; 100+ காயம்
Updated on
1 min read

கொழும்பு: இலங்கை​யின் மேற்​குக் கடற்​கரை நகர​மான நீர்கொழும்புவில் உள்ள சிறை​யில் நேற்றும் இன்றும் நிகழ்ந்த கைதிகளின் மோதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள ​சிறை​யில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியுள்ளது. இ​தில் இரு கைதி​கள் கொல்லப்பட்​டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதி​கள் மருத்​து​வ​மனைக்கு அனுப்பப்​பட்​டனர்​.

இதைத் தொடர்ந்து இன்றும் மோதல் வெடித்தது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 6 பேர் சிறை அதிகாரிகள், காயமடைந்த 100-க்கும் ற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 13 பேர் காவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களின் துப்பாக்கிகளைப் பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோதல் காரணமாக சிறைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்ததால் அங்கும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் கைதிகளில் பலர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வெளியே கதறி அழும் உறவினர்கள்</p></div>

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வெளியே கதறி அழும் உறவினர்கள்

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறைத் துறை ஆணையர் உத்தரவின் பேரில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் சிறைத் துறையின் செய்தித் தொடர்பாளர் கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைத் துறைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சிறையில் மீண்டும் கைதிகள் மோதல்: 26 பேர் உயிரிழப்பு; 100+ காயம்
கர்நாடக எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக கூட்டணி புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in