சிங்கப்பூரில் உள்ள இந்திய பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மையம்

சிங்கப்பூரில் உள்ள இந்திய பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மையம்
Updated on
1 min read

சிங்கப்பூர்: வன்​முறை​யால் பாதிக்​கப்​படும் பெண்​களுக்கு (குடும்​பம், சமூகம், பணி​யிடம் என எங்கு நடந்​தா​லும்) ஒரே இடத்​தில் மருத்​து​வம், சட்ட உதவி, உளவியல் ஆலோ​சனை, பாது​காப்​பான தங்​குமிடம், காவல்​துறை உதவி போன்ற ஒருங்​கிணைந்த சேவை வழங்​கிட ‘ஒன் ஸ்டாப் சென்​டர்’ என்ற சேவை மையத்தை நாடு முழு​வதும் மத்​திய அரசு திறந்​து உள்​ளது.

இது​போல் வெளி​நாடு​களில் உள்ள இந்​தி​யப் பெண்​களின் பாது​காப்பை உறுதி செய்​திடும் வகை​யில் ஓஎஸ்சி சேவை மையங்​கள் திறக்​கப்​பட்டு வரு​கின்​றன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்​தார், சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் கனடா​வில் இந்த சேவை மையங்​கள் திறக்​கப்​பட்​டு உள்​ளன.

இந்​நிலை​யில் சிங்​கப்​பூரில் உள்ள இந்​தி​யப் பெண்​களுக்கு உதவிட அங்​குள்ள இந்​திய தூதரக வளாகத்​தில் ‘ஒன் ஸ்டாப் சென்​டர்’ சேவை மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து இங்​குள்ள இந்​தி​யத் தூதர் ஷில்​பாக் அம்​புலே கூறுகை​யில், “துன்​பத்​தில் இருக்​கும் இந்​தி​யப் பெண்​களுக்கு இந்த மையம் உதவிடும். உடல், பாலியல் அல்​லது உளவியல் ரீதி​யாக பாதிக்​கப்​படும் மற்​றும் பொருளா​தார சுரண்​டலுக்கு ஆளாகும் பெண்​களுக்கு அவசர உதவி, தற்​காலிக தங்​குமிடம், சட்​டம், மருத்​துவ உதவி, உளவியல் ஆலோ​சனை உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த சேவை​களை இந்த மையம் வழங்​கும்.

பிரத்​யேக தொலைபேசி (+65 8716 5521) மற்​றும் மின்​னஞ்​சல் (osc.singapore@mea.gov.in) மூலம்​ இந்​தி​யப்​ பெண்​கள்​ 24 மணி நேர​மும்​ உதவியை ​நாடலாம்​” என்​றார்​.

சிங்கப்பூரில் உள்ள இந்திய பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மையம்
இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in