

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பாம் கடற்கரை பகுதியில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான கேளிக்கை விடுதி உள்ளது. இதில் அதிபர் ட்ரம்ப் புத்தாண்டை கொண்டாடினர்.
புத்தாண்டு விழாவின் ஒரு பகுதியாக பெண் ஓவியர் வனேசாரோராபுவேனா, ஏசு கிறிஸ்துவின் ஓவியத்தை அங்கேயே வரைந்தார். அதிபர் ட்ரம்ப் அந்த ஓவியத்தை ஏலம் விட்டார். ரூ.2 கோடியில் ஏலம் தொடங்கியது. இறுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் ரூ.25 கோடிக்கு ஏசுவின் ஓவியத்தை ஏலம் எடுத்தார்.
இந்தப் பணம் செயின்ட் ஜுடு குழந்தைகள் நல மருத்துவமனைக்கும், உள்ளூர் காவல் நிலைய மேம்பாட்டுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.