உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்ய புத்தாண்டு நிகழ்வில் 24 பேர் உயிரிழப்பு

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்ய புத்தாண்டு நிகழ்வில் 24 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மாஸ்கோ: ரஷ்யா - உக்​ரைன் இடையே மோதல் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. ரஷ்ய அதிபர் புதின் இல்​லத்தை நோக்​கி​யும் உக்​ரைன் ட்ரோன்​களை ஏவிய​தாக ரஷ்யா குற்​றம் சாட்​டியது.

இந்​நிலை​யில் புத்​தாண்​டான நேற்று ரஷ்​யா​வின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த 200-க்​கும் மேற்​பட்ட ட்ரோன்​களை உக்​ரைன் அனுப்​பியது. இவற்​றில் 168 ட்ரோன்​களை ரஷ்ய வான் பாது​காப்பு ஆயுதங்​கள் இடைமறித்து அழித்​தன. பிர​யான்​ஸ்க் பகு​தி​யில் 61 ட்ரோன்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன.

மாஸ்​கோ​வில் 9 ட்ரோன்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. அசோவ் கடல் பகு​தி​யில் 24 ட்ரோன்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இவ்​வாறு ரஷ்​யா​வில் பல பகு​தி​களில் பல ட்ரோன்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன.

ஆனால் ரஷ்​யா​வின் கெர்​சன் மாகாணத்​தின் கொர்லி கடற்​கரை நகரில் உள்ள உணவு விடுதி மீது 3 ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில் புத்​தாண்டு கொண்​டாட்​டத்​தில் பங்​கேற்ற 24 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர் என் கெர்சன் மா​காண ஆளுநர் விளாடிமிர்​ சால்​டோ தெரி​வித்​தா​ர்​.

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்ய புத்தாண்டு நிகழ்வில் 24 பேர் உயிரிழப்பு
“சிட்னியில் நடைபெறும் ஆஷஸ் போட்டிதான் கடைசி” - ஓய்வை அறிவித்த கவாஜா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in