குவைத் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - விமான சேவைகள் நிறுத்தம்

குவைத் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - விமான சேவைகள் நிறுத்தம்
Updated on
2 min read

குவைத்: ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் ‘டி1’ கட்டிடத்தின் மீது இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குவைத் விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சவுத் அப்துல் அஜிஸ் அல்-ஒதைபி, "ஈரானின் பல ட்ரோன்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கட்டிடத்தை இலக்காகக் கொண்டு கடுமையாக தாக்கின. இந்தத் தாக்குதலில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்ததுடன், பல நபர்கள் காயமடைந்தனர்" என்று தெரிவித்தார்.

தங்கள் நாட்டின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

முன்னதாக, குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகள் பாதியிலேயே தாக்கி அழிக்கப்பட்டன என்றும், பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

வளைகுடாவில் உள்ள தங்கள் நட்பு நாடுகள் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்ததுடன், ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவின் மீது தற்காப்புத் தாக்குதல்களையும் நடத்தியதாகவும் கூறியது.

மேலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவின் தலைமையகத்தையும், அங்குள்ள மற்றொரு விமானத் தளத்தையும் தாக்கியதாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பை அமெரிக்கா மறுத்துள்ளது.

நெதன்யாகு மீது ட்ரம்ப் காட்டம்:

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் கடந்த பிப்​ர​வரி இறு​தி​யில் தாக்​குதல் நடத்​தின. இது மத்​திய கிழக்கு பிராந்தி​யத்​தில் போராக வெடித்​தது. இதையடுத்​து, கடந்த ஏப்​ரல் மாதம் போர் நிறுத்​தம் அறி​வித்த அமெரிக்​கா, ஈரானுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்காவின் முயற்​சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகை​யில், லெப​னான் மீது இஸ்ரேல் தீவிர தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.

இதன் எதிரொலி​யாக, சமீபத்​தில் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்​யாகு​வுடன் ட்ரம்ப் மேற்​கொண்ட தொலைபேசி உரையாடல் கடும் வாக்​கு​வாத​மாக மாறியதாக அமெரிக்க ஊடகமான ‘ஆக்​ஸியோஸ்' செய்தி வெளி​யிட்​டுள்​ளது. தொலைபேசி உரை​யாடலின்​போது நெதன்​யாகுவை மிகக் கார​சா​ர​மான வார்த்​தைகளால் திட்டிய ட்ரம்ப், அவர் நன்றி கெட்​ட​வர் என்​றும் சாடி​னார்.

நெதன்​யாகு​வின் ஊழல் வழக்​கைக் குறிப்பிட்டு, “நான் மட்டும் இல்​லை​யென்​றால் நீ இப்​போது சிறையில் இருந்திருப்​பாய். நான்​தான் உன்​னைக் காப்பாற்றுகிறேன். ஆனால், உன்​னுடைய இந்த நடவடிக்​கை​யால் இப்​போது உலக நாடு​கள் அனைத்​தும் உன்​னை​யும், இஸ்​ரேலை​யும் வெறுக்கின்றன. நீ ஒரு பைத்​தி​யக்​காரன்” என்று ட்ரம்ப் ஆவேசமாகப் பேசி​னார். இந்​தத் தொலைபேசி உரையாடலுக்​குப் பிறகு, லெப​னான் மீது பெரிய அளவிலான தாக்​குதலை நடத்த வேண்​டாம் என்ற தனது கோரிக்​கையை நெதன்​யாகு ஏற்றுக்கொண்ட​தாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்​கத்​தில் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

குவைத் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - விமான சேவைகள் நிறுத்தம்
“ஆட்சி நிர்வாகம், மாநில உரிமைகளில் பங்களிப்பு...” - கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் விஜய் புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in