ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது: 14 மாலுமிகளை மீட்டது அமெரிக்கப் படை

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது: 14 மாலுமிகளை மீட்டது அமெரிக்கப் படை
Updated on
1 min read

புதுடெல்லி: ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்​டது.

ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை மீறி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்றதால் அவற்​றின் மீது அமெரிக்​கப்​படை தாக்​குதல் நடத்தி முடக்​கியது. இதில் ஒரு கப்​பலில் 3 இந்​திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

இந்​நிலை​யில் ஓமன் கடல் பகு​தி​யில் இருந்து 80 நாட்​டிக்​கல் மைல் தொலை​வில் எம்​எஸ்வி விராட் 1 என்ற இந்​திய கப்​பலில் இன்​ஜின் பழுதடைந்​து மூழ்​கத் தொடங்​கியது. இதுகுறித்து அங்கு கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள அமெரிக்க கடற்​படை ஓமன் அதி​காரி​கள் மற்​றும் இந்​திய கடற்​படைக்கு தகவல் கொடுத்​தது.

அதோடு அமெரிக்க கடற்​படை​யின் பி8 கண்​காணிப்பு விமானம் இந்​திய கப்​பல் அருகே ரப்​பர் படகு ஒன்றை வீசி​யது. எம்​எஸ்வி விராட் 1 கப்​பலில் இருந்த 14 மாலுமிகளும் அதன்மூலம் மீட்​கப்​பட்டு பாது​காப்​பான இடத்​துக்கு கொண்டு வரப்​பட்​டனர். இந்த மீட்பு பணியை ஓமன் அதி​காரி​களும் இந்​திய தூதரக அதி​காரி​களும் இணைந்து மேற்​கொண்​டனர்​.

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது: 14 மாலுமிகளை மீட்டது அமெரிக்கப் படை
பிரான்ஸில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு: அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in