சீஷெல்ஸ் நாட்டுடன் கல்வி, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார் அதிபர் பாட்ரிக் ஹெர்மினி
பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதை அந்த நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினி வழங்கினார். படம்: பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதை அந்த நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினி வழங்கினார். படம்: பிடிஐ

Updated on
2 min read

விக்டோரியா: சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையே கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமைந்​துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதையொட்​டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்​டோரி​யா​வுக்கு அவர் நேற்று முன்​தினம் சென்​றார். இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்​டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்​கப்​பட்​டது.

அந்​நாட்டு அதிபர் பாட்​ரிக் ஹெர்​மினி, விருதை வழங்கி கவுர​வித்​தார். சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, காலநிலை மாற்​றம் தொடர்​பான நடவடிக்​கைகள், சிறு நாடு​களின் வளர்ச்​சியை ஊக்​கு​விப்​ப​தில் அக்​கறை காட்​டு​வது ஆகிய​வற்​றில் பிரதமர் மோடி​யின் பங்​களிப்​பை பாராட்டி இந்த விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விருதை​யும் சேர்த்து பிரதமர் மோடி இது​வரை 33 சர்​வ​தேச விருதுகளைப் பெற்​றுள்​ளார்.

சீஷெல்ஸ் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் மோடி நேற்று சிறப்​புரை நிகழ்த்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: எனக்கு வழங்​கப்​பட்ட ‘கார்​டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதுக்​காக 140 கோடி இந்​தி​யர்​கள் சார்​பில் சீஷெல்ஸ் மக்​களுக்​கும், அரசுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். சீஷெல்ஸ் நாடு 50-வது தேசிய தினத்​தைக் கொண்​டாடு​கிறது. அத்​துடன், இந்​தியா - சீஷெல்ஸ் தூதரக உறவின் 50-வது ஆண்​டை​யும் கொண்​டாடு​கிறோம். இரு நாடு​கள் இடையே வர்த்​தகம், கலாச்​சார ரீதி​யான உறவு வலு​வடைந்து வரு​கிறது.

கடந்த பிப்​ர​வரி​யில் சீஷெல்ஸ் அதிபர் பாட்​ரிக் ஹெர்​மினி இந்​தி​யா​வில் அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது பல்​வேறு துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்ற உறுதி மேற்​கொள்​ளப்​பட்​டது. குறிப்​பாக, சீஷெல்ஸ் நாட்​டுக்​குத் தேவை​யான டிஜிட்​டல் தொழில்​நுட்ப உதவி​களை இந்​தியா வழங்​கும். இதன் ஒரு பகு​தி​யாக, இந்​தி​யா​வின் யுபிஐ டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றத் திட்​டத்தை செயல்​படுத்த இரு நாடு​கள் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது.

சீஷெல்ஸ் தீவின் வீட்டு வசதி, உணவுப் பாது​காப்​பு, கல்​வி, பாது​காப்​பு, அரசு நிர்​வாகம் உள்​ளிட்ட துறை​களுக்​குத் தேவை​யான உதவி​களை இந்​தியா வழங்​கும். இந்​தி​யா​வின் மக்​கள் மருந்​தகம் திட்​டம் சீஷெல்ஸில் அறி​முகம் செய்​யப்​படும். இதன்​மூலம் இங்குள்ள மக்​களுக்கு குறைந்த விலை​யில் தரமான மருந்​துகள் கிடைக்​கும். சீஷெல்ஸ் இளைஞர்​களுக்கு திறன்​சார் பயிற்சி வழங்​கப்​படும். எரிசக்​தி, ஹைட்​ரஜன் உற்​பத்​தி, மீன்​வளம், விண்​வெளி உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். இதுதொடர்​பாக புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

சீஷெல்ஸ் அதிபர் பாட்​ரிக் ஹெர்​மினியை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். அப்​போது இரு நாடு​கள் இடையே 19 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. பாது​காப்பு ஒப்​பந்​தத்தின் ஒரு பகு​தி​யாக, இந்​தியா சார்​பில் சீஷெல்ஸுக்கு நேற்று அதிநவீன ரோந்து கப்​பல் பரி​சாக வழங்​கப்​பட்​டது. இந்த ரோந்து கப்பலுடன் 5 ரோந்து படகு​கள், 6 ஆம்​புலன்ஸ் படகு​களும் வழங்​கப்​பட்டன. மேலும், இந்​தியா சார்​பில் 500 டன் அரிசி, 8,500 டன் சிமென்ட் வழங்​கப்பட உள்​ளது. இந்​தி​யா உதவி​யுடன் சீஷெல்​ஸில் கட்​டப்பட உள்ள சிறப்பு தொழில்​நுட்ப பயிற்சி மையத்​துக்கு நேற்று அடிக்​கல் நாட்​டப்​பட்​டது.

யுபிஐ டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றம், மக்​கள் மருந்​தகம், வேளாண் துறை, கைதி​கள் பரி​மாற்​றம், சீஷெல்ஸ் கடற்​படை வீரர்​களுக்கு சிறப்பு பயிற்சி, விண்​வெளி, சீஷெல்ஸ் தலை நகரில் சிறப்பு மருத்​து​வ​மனை கட்​டு​வது தொடர்​பாகவும் ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

தமிழர்களின் முக்கியத்துவம்: சீஷெல்ஸ் தீவு நாட்​டில் மொத்​தம் 115 தீவு​கள் உள்​ளன. கடந்த 1770-ம் ஆண்​டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 15 பேர் அங்கு குடியேறினர். அவர்​களோடு 7 ஆப்​பிரிக்​கர்​கள், 5 இந்​தி​யர்​களும் அங்கு குடியமர்த்​தப்​பட்​டனர். இதன்​பிறகு இந்​தி​யா​வின் தமிழகம், பிஹார், குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த மக்​கள் சீஷெல்ஸ் தீவில் குடியேறினர். ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மடகாஸ்​கர், தான்​சானி​யா, கென்​யா, மொசாம்​பிக் நாடு​களை சேர்ந்த மக்​களும் அங்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

தற்​போது சீஷெல்ஸ் நாட்டில் சுமார் 1.35 லட்​சம் பேர் வசிக்​கின்​றனர். இதில் 11 சதவீதம் பேர் இந்​திய வம்​சாவளி​யினர். இதில் பெரும்​பாலானோர் தமிழர்​கள். சீஷெல்ஸின் துணை அதிபர் செபாஸ்​டியன் பிள்​ளை​ இந்​தி​யாவை பூர்​வீக​மாகக் கொண்​ட​வர். சீஷெல்ஸ் நாட்​டில் வசிக்​கும் தமிழர்​கள், தலைநகர் விக்​டோரி​யா​வில் நவசக்தி வி​நாயகர் கோயிலை பிரம்​மாண்​ட​மாக கட்டியுள்​ளனர். இந்த கோயி​லில் பொங்​கல், காவடி திரு​விழா, வி​நாயகர்​ சதுர்த்​தி உள்ளிட்ட விழாக்​கள்​ விமரிசை​யாக கொண்​டாடப்​படு​கின்​றன. சீஷெல்​ஸ்​ மக்​கள்​ தொகை​யில்​ 5.5 சதவீதம்​ பேர்​ இந்​துக்​கள்​ என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதை அந்த நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினி வழங்கினார். படம்: பிடிஐ</p></div>
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in