Published : 07 Sep 2017 10:24 AM
Last Updated : 07 Sep 2017 10:24 AM
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அந்நாட்டு அரசும் அமெரிக்காவும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி சிரியாவின் கான் ஷேக்ஹுன் என்ற பகுதியில் சில விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் பொதுமக்கள் உட்பட 83 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஐ.நா.வின் போர்க் குற்றங்கள் தொடர்பான குழு விசாரணை நடத்தியது. இக்குழு அளித்துள்ள அறிக்கையில், ‘‘சிரியா அரசு சரின் விஷ வாயு தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன’’ என்று உறுதிப்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT