Published : 26 Sep 2017 01:25 PM
Last Updated : 26 Sep 2017 01:25 PM
"நாங்கள் அவர்கள் மீது போர் அறிவிக்கவில்லை. வடகொரியாவின் குற்றச்சாட்டு அபத்தமானது" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா போர் அறிவித்துள்ளதாக வடகொரியா கூறியுள்ளதை அபத்தம் என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.
வடகொரியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யாங் ஹோ திங்கட்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, "உலக நாடுகள் அனைத்துக்கும் அமெரிக்காதான் எங்கள் மீது முதலில் போர் அறிவித்தது என்று நன்கு தெரியும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வடகொரியாவின் இந்த கருத்து குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "போரை முதலில் அறிவித்தது அமெரிக்காதான் என்று வடகொரியா கூறியுள்ளது அபத்தமானது. அமெரிக்கா அமைதியைத்தான் விரும்புகிறது. அமெரிக்காவை தூண்டும் நடவடிக்கையை வடகொரியா நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT