Published : 02 Sep 2017 08:58 AM
Last Updated : 02 Sep 2017 08:58 AM

சிங்கப்பூர் இடைக்கால அதிபராக தமிழர் பதவியேற்பு

சிங்கப்பூரின் இடைக்கால அதிபராக தமிழர் ஜோசப் பிள்ளை (83) நேற்று பதவியேற்றார்.

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமின் 6 ஆண்டு கால பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் முடிந்து புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஜோசப் பிள்ளை (88) நேற்று பொறுப்பேற்றார்.

வரும் 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஒருவேளை ஒருமித்த கருத்துடன் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரிடம் ஜோசப் பிள்ளை பொறுப்புகளை ஒப்படைப்பார் என்று சிங்கப்பூர் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் அரசின் மூத்த அரசு அதிகாரியான ஜோசப் பிள்ளை, அதிபர் ஆலோசனை கவுன்சில் தலைவராக உள்ளார். அந்த நாட்டு அதிபர் வெளிநாடு செல்லும்போதெல்லாம் பொறுப்பு அதிபர் பொறுப்பை அவர் ஏற்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது அவர் தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ளார். இதுவரை 60-க்கும் மேற்பட்ட முறை அவர் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x