Last Updated : 12 Nov, 2016 09:26 PM

 

Published : 12 Nov 2016 09:26 PM
Last Updated : 12 Nov 2016 09:26 PM

பாகிஸ்தான் தர்காவில் பயங்கர குண்டுவெடிப்பு: 30 பேர் பலி; 100 பேர் காயம்

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தர்காவில் வெடித்த குண்டு குழந்தைகள் பெண்கள் உட்பட 30 உயிர்களை பலிவாங்கியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் லஸ்பேலா மாவட்டத்தில் ‘தமால்’ என்ற சூஃபி நடனத்தை தர்கா ஷா நூரானியில் மக்கள் கண்டு களித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது.

பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் சர்பராஸ் பக்டி இதனை உறுதி செய்ததொடு, ‘பலர்’ பலியானதாக தெரிவித்தார்.

ஆனால் உள்ளூர் ஊடகங்களின் தகவல்கள் படி சுமார் 30 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது எளிதில் அணுக முடியாத ஒரு பகுதியாகும் அதுவும் தற்போது இருட்டு கவியத் தொடங்கியுள்ளதால் உடல்களை மீட்பதும், பிற மீட்புப் பணிகளும் கடுமையாக பாதிப்படையும் என்று பக்டி கவலையடைந்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x