Published : 15 Nov 2016 10:13 AM
Last Updated : 15 Nov 2016 10:13 AM
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இறந்ததாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் ஊடுருவி பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும் பாகிஸ் தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலை கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “பிம்பர் செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணு வம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கு தல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
எல்லையில் 7 வீரர்களின் உயி ரிழப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்த அறிக்கை யில், “எல்லையில் சமீபகாலமாக இந்தியப் படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது துரதிருஷ்டவசமானது.
எவ்வித ஆக்கிரமிப்பில் இருந் தும் நமது எல்லையைப் பாது காத்துக்கொள்ளும் திறன் நமக்கு உள்ளது. காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, எல்லையில் இந்தியப் படைகள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச் சகம் கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், “எல்லையில் கடந்த சில வாரங்களாக இந்தியா நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT