Published : 08 May 2016 01:56 PM
Last Updated : 08 May 2016 01:56 PM
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.
சிந்து மாகாணத்தில் நடந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து விசாரணை கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகனான இந்தச் சிறுவனின் உடல் கடந்த ஏப்ரல் 13-ம் ஹைதராபாத் கிளப் நீச்சல் குளத்தில் மிதந்தது. பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தலை மறைப்பதற்காக நீரில் தூக்கி வீசியுள்ளனர் என்று பெற்றோர் கடும் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
கிளப்பில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையேயும் தனது மகன் சுமார் ஒருமணி நேரமாகக் காணவில்லை என்று சிறுவனின் தந்தை சேத்தன் குமார் கூறுகிறார். பிறகு சிறுவனின் உடல் நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்டது, சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது.
மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராவைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. சமூக ஆர்வலர்களும் இந்து மதத் தலைவர்களும் பாரபட்சமற்ற தீவிர விசாரணை கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT