Last Updated : 26 May, 2016 10:48 AM

 

Published : 26 May 2016 10:48 AM
Last Updated : 26 May 2016 10:48 AM

இந்து தொழிலதிபர் வங்கதேசத்தில் கொலை

வங்கதேசத்தில் இந்து தொழில திபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கோவிந்தாகஞ்ச் உபாஸிலா பகுதியில் உள்ள கைபந்தாவில் ஷூ விற்பனை நிலையம் நடத்தி வந்தவர் தேபேஷ் சந்திரா பிரமா னிக் (68). இவர் நேற்று தனது கடையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “கூர்மையான ஆயு தத்தால் தேபேஷின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நேபென் சந்திரா என்பவரைக் கைது செய்துள்ளோம்” என்றார்.

பிரமானிக்கின் மகன் தேபாஷிஷ் சந்திரா கூறும்போது, “போதைமருந்துக்கு அடிமையா னவர்கள்தான் என் தந்தையைக் கொன்றிருக்க வேண்டும். அவர் களுக்கு என் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது” என்றார்.

ஆனால், கொலைக்கான காரணம் மற்றும் கொலைகாரர் கள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில், அண்மைக் காலமாக முற்போக்குவாதிகள், மதச்சார்பற்றவர்கள், எழுத்தா ளர்கள், சிறுபான்மையினர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்துள் ளது.

கடந்த வாரம் முஸ்லிம் ஹோ மியோபதி மருத்துவர் கொல்லப் பட்டார். பெரும்பாலான கொலைகளுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்கிறது. ஆனால், வங்கதேச அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.

உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “உள்ளூர் தீவிரவாதிகள், தங்களுக்கு ஐஎஸ், அல் காய்தா போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை நிரூபிக்க முயற்சி செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x