Last Updated : 23 Mar, 2016 10:13 AM

 

Published : 23 Mar 2016 10:13 AM
Last Updated : 23 Mar 2016 10:13 AM

பாகிஸ்தானில் கள்ளச்சாராயம் குடித்த 24 இந்துக்கள் பலி

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை யின் போது கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 6 பெண்கள் உட்பட 24 இந்துக்கள் உயிரிழந்தனர்.

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தாண்டே முஹமது கான் மாவட்டத்தில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஹோலி பண்டிகை முன் னிட்டு நடந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப் போது கள்ளச்சாராயம் அருந்திய வர்களில் 37 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பெண்கள் உட்பட 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் திருப்பதாக போலீஸார் தெரிவிக் கின்றனர்.

ஆத்திரமடைந்த உள்ளூர்வாசி கள் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய போலீஸாரை கண் டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x