Published : 02 Oct 2021 02:43 PM
Last Updated : 02 Oct 2021 02:43 PM

அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ 

வரும் 2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், "பிலிப்பைன்ஸ் மக்கள் நான் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று நினைக்கவில்லை. இனியும் நான் அப்பதவியில் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக அமையும். அதனால் இன்று நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அதிபரும்; சர்ச்சையும்:

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொதைப்பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுவார். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி எல்லாம் இவருக்குக் கவலையில்லை.

மனித உரிமை ஆர்வலர்களின் பேச்சை இவர் துளியும் சட்டை செய்வதில்லை. இந்த சட்ட விரோதக் கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார். 72 வயதாகும் ரொட்ரிகோ டுட்ரேட் 1986-ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டுவரை தேவோ நகரின் மேயராக இருந்தவர். அவரது ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது,

இந்நிலையில் அவர், அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x