Published : 29 Sep 2021 11:34 AM
Last Updated : 29 Sep 2021 11:34 AM

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,836 பேர் பலி

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு 1,836 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தரப்பில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,836 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில், 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாகவே கடந்த சில மாதங்களாக கரோனா அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனாவினால் உயிரிழப்பு ஏற்படுவது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்திருந்தது. அதன் பொருட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

அமெரிக்கா தனது குடிமக்களில் 75% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x