Published : 07 Sep 2021 05:49 PM
Last Updated : 07 Sep 2021 05:49 PM

பிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 18,012 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,21, 308 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. அதன் முயற்சியாக மார்ச் முதல் கரோனா தடுப்பூசிகள் போடுவது தீவிரமடைந்து வருகிறது.

”கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்லுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்களா அல்லது சிறைக்குச் செல்கிறீர்களா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” பிலைப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x