Published : 14 Feb 2016 12:44 PM
Last Updated : 14 Feb 2016 12:44 PM
அமெரிக்காவில் உள்ள கென்னடி கலை மையத்தின் பொது அறங்காவலராக, இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற நாள் முதலாக அந்நாட்டின் உயர் பதவிகளில் இந்தியர்களை நியமித்து வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஜான் எஃப்.கென்னடி கலை மையத்தின் பொது அறங்காவலராக இந்தியரான ரன்வீர் டிரெஹனை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். இவர் இந்தியாவின் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். கடந்த 1964-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த ரன்வீர், சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பை நிறுவி பணியாற்றி வந்தார். குறிப்பாக சர்வதேச வறுமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டதுடன் கலை மற்றும் மனிதாபிமான சேவைகளையும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT