Published : 04 Aug 2021 12:36 PM
Last Updated : 04 Aug 2021 12:36 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர்.
இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் சக்திவாய்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். இந்த குண்டுவெடிப்புகள் அங்கு அமைந்துள்ள வெளிநாட்டுத் தூதரகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதா? என்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர். உயிரிழப்பு பற்றி விவரம் எதுவும் இல்லை. பல இடங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர். தற்போது காபூலில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் பிஸ்மில்லா கான் தெரிவித்துள்ளார்” என்று செய்தி வெளியானது
இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Huge blast heard in PD 10 Kabul city.#Afghanistan pic.twitter.com/oM8ZNThz5b
— Pajhwok Afghan News (@pajhwok) August 3, 2021
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
பின்னணி:
2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.
தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT