Published : 04 Feb 2016 10:51 AM
Last Updated : 04 Feb 2016 10:51 AM
மியான்மர் புதிய நாடாளுமன்றத் தின் மேலவை சபாநாயகராக உமான் வின் கைங் தான் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் (என்எல்டி) 80 சதவீத இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் அக்கட்சி பெரும் பான்மை பெற்ற நாடாளுமன்றம் கடந்த 1-ம் தேதி முதல் அதிகாரப் பூர்வமாக செயல்படத் தொடங்கி யது. அன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற கீழ் அவை (பிரதிநிதிகள் சபை) சபாநாயகராக சூச்சியின் கட்சியை சேர்ந்த உவின் மியின்ட் தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகராக, தற்போது பதவியில் இருக்கும் யு.எஸ்.டி.பி. கட்சியை சேர்ந்த உதி குன் மியாத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய மேலவை (தேசிய மக்கள் சபை) கூட்டத்தில் சபாநாய கராக சூச்சியின் கட்சியை சேர்ந்த உமான் வின் கைங் தான் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓய்வுபெற்ற சட்ட அதிகாரி ஆவார்.
இதுபோல் மேலவை துணை சபாநாயகராக அரகான் தேசிய கட்சியைச் சேர்ந்த உவே தா ஆங் தேர்வு செய்யப்பட்டார்.
மியான்மரின் தற்போதைய அதிபர் தெய்ன் செய்ன் வரும் மார்ச் இறுதியில் பதவி விலகுவார் என்று தெரிகிறது. அதன் பிறகே தேசிய ஜனநாயக லீக் ஆட்சிப் பொறுப்பேற்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT