Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
சட்ட விதிகளை மீறி தன் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறி டொமினிக்கன் தேசிய பாதுகாப்பு அமைச்சர், காவல் துறை தலைவர், விசாரணை அதிகாரி மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு எதிராக மொகுல் சோக்சி அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
மெகுல் சோக்சி மீது நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைத் தலைவர் மற்றும் விசாரணை அதிகாரியின் முடிவானது சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பு அமைச்சர், மாஜிஸ்திரேட் ஆகியோரின் நடவடிக்கைகளும் சட்டத்தை மீறி எடுக்கப்பட்டதாக உத்தரவிட வேண்டும்என்று அவர் கேட்டுகொண்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு மெகுல் சோக்சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். லண்டனுக்குச் தப்பிச் சென்ற நீரவ் மோடி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு கைது செய்யப்பட்டார்.
மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கு தப்பிச்சென்று அங்கு குடியுரிமைப் பெற்றார். இந்நிலையில், அவர் கடந்த மே 23-ம் தேதிஆன்டிகுவா தீவிலிருந்து மாயமானார். பின்னர் டொமினிக்கனில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரைக் கைது செய்த காவல் துறை, சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை டொமினிக்கன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT