Published : 01 Jul 2021 08:34 PM
Last Updated : 01 Jul 2021 08:34 PM

சுற்றுலா பயணிகளுக்கு பிரிட்டன் பிரதமரின் செய்தி

கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட பிரிட்டன் மக்கள் இவ்வருடம் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான் கூறும்போது, “கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட பிரிட்டன் மக்கள் ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான விவரங்கள் இம்மாதம் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 26 ஆயிரத்து 68 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் இதுவரை 80 % பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 60% பேருக்கு இரண்டு டோஸும் போடப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாக பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தளர்வுகள் அறிவிப்பதை அரசு தள்ளி வைத்துள்ளது.

2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் தொற்றுப் பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்ற வைரஸ் தற்போது 96 நாடுகளில் பரவியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x