Published : 28 Jun 2021 04:41 PM
Last Updated : 28 Jun 2021 04:41 PM

பிரிட்டனில் கரோனா அதிகரித்தாலும் மருத்துவமனை சேர்க்கை குறைவு

பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரிட்டனில் பரவும் டெல்டா கரோனா வைரஸ் காரணமாக அங்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,876 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகி உள்ளனர். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரிட்டனில் 1 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்தியதன் காரணமாக அங்கு கரோனா இறப்பும் குறைந்திருக்கிறது. தொற்று அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேரும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு தளர்வுகளை அறிவிப்பதா? இல்லையா? என்பதை அரசு சிந்தித்து வருகிறது” செய்தி வெளியானது.

பிரிட்டனில் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ளபோதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x