Published : 26 Apr 2021 09:39 PM
Last Updated : 26 Apr 2021 09:39 PM

அதிகரிக்கும் கரோனா: பொதுமக்களுக்கு பாகிஸ்தான் விடுத்த ஊரடங்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசுத் தரப்பில், “பாகிஸ்தானில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவில் கரோனா பரவல் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானும் தனது கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக் அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x