Published : 21 Dec 2015 02:23 PM
Last Updated : 21 Dec 2015 02:23 PM
2015-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பியா அலோன்ஸோ உர்ட்ஸ்பட்ச் என்ற 24 வயது பெண் 'தட்டி'ப் பறித்தார்.
இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக கொலம்பிய அழகி அரியட்னா தவறுதலாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பிலிப்பைன்ஸ் அழகிக்கு பட்டம் சூடப்பட்டது.
மொத்தத்தில், இம்முறை பிரபஞ்ச அழகிக்கான இறுதிப் போட்டி சொதப்பலாக நடைபெற்று கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்காவின் லாஸ் வேகஸில் ஞாயிற்றுக்கிழமை 2015-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்த ஆண்டிக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஸோ உர்ட்ஸ்பட்ச் வென்றார்.
கோலாகலமாக நடந்த அழகிகளின் அணிவகுப்பு விழாவைத் தொடர்ந்து பியாவுக்கு பிரபஞ்ச அழகிக்கான மகுடம் சூட்டப்பட்டது.
அழகியை அறிவிப்பதில் குழப்பம்
பிரபஞ்ச அழகியை அறிவிக்கும்போது கொலம்பியாவின் அரியட்னா குடியர்ரெஸ் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தவறுதலாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து, நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ஸ்டீவ் ஹார்வே மன்னிப்பு கேட்டுக் கொண்டு, பிலிப்பைன்ஸின் பியா அலோன்ஸோ உர்ட்ஸ்பட்ச் இந்த ஆண்டுக்கான அழகியாக அறிவித்தார்.
பட்டம் வென்ற பியா அலோன்ஜோ பேசுகையில், "பிரபஞ்ச அழகியாக இருப்பது மரியாதைக்குரிய விஷயம் மட்டுமல்ல; பொறுப்புமிக்கதும் கூட. பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ள நான் இளைஞர்களுக்காக குரல் கொடுப்பேன். முக்கியமாக எச்.ஐ.வி உள்ளிட்ட நோய் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இதன் அவசியம் அதிகமாக உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT