Last Updated : 18 Nov, 2015 09:33 AM

 

Published : 18 Nov 2015 09:33 AM
Last Updated : 18 Nov 2015 09:33 AM

கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்

கிரீஸ் நாட்டின் மேற்கு தீவான லெஃப்கடாவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 2 பெண் கள் உயிரிழந்தனர்.

ஏதென்ஸ் நகரில் இருந்து மேற்கே சுமார் 300 கி.மீ. தொலை வில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கிரீஸ் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

லெஃப்கடா மற்றும் அதை யொட்டிய கெஃபலோனியா தீவுகளில் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள் பீதியடைந்து, அவற் றில் இருந்து அவசர அவசர மாக வெளியேறினர். நிலநடுக்கத் தில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மேற்கு கிரீஸில் இருந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள் ளனர்.

போன்டி வாஸ்லிகி பகுதியில் மலையில் இருந்து பாறை உருண்டு 60 வயது பெண் உயிரிழந்தார். அதானி என்ற கிராமத்தில் வீடு இடிந்ததில் மற்றொரு பெண் பலியானார். மேலும் லெஃப்கடா தீவுப் பiகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

உலகில் நிலநடுக்க வாய்ப்பு அதிகம் உள்ள பகுதியில் கிரீஸ் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படு கிறது. என்றாலும் மிக அரிதாகவே கடும் சேதம் ஏற்படுகிறது.

இந்நாட்டில் ஏதென்ஸ் நகருக்கு அருகில் கடந்த 1999-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக் கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x