Published : 09 Mar 2021 05:23 PM
Last Updated : 09 Mar 2021 05:23 PM

ரஷ்யாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 10,000க்கும் கீழ் குறைந்தது

ரஷ்யாவில் அன்றாட கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நோய் கட்டுப்பாட்டு மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,445 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லை. மாஸ்கோவில் நேற்று மட்டும் 1,066 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரஷ்யாவில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

சுமார் 60% ரஷ்யர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படுவதால் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர் என்று ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x