Last Updated : 22 Nov, 2015 11:37 AM

 

Published : 22 Nov 2015 11:37 AM
Last Updated : 22 Nov 2015 11:37 AM

தீவிரவாத அமைப்புகள், செயல்பாடு தொடர்பாக உளவு தகவலை பரிமாறிக்கொள்ள இந்தியா, சீனா உடன்பாடு

தீவிரவாத அமைப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான உளவு தகவல்களை பரிமாறிக்கொள்வது என இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்மூலம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவில் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் லீ கெஹியாங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகள் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்காக, தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அவற்றின் தொடர்புகள் உள்ளிட்டவை தொடர்பான உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பிராந்திய அளவிலும் பல்வேறு நாடுகள் கூட்டாக இணைந்தும் தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பது என்றும் இரு நாடுகளுக்கிடையே தீவிரவாத எதிர்ப்புப் படையினரை பரிமாறிக்கொள்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம் பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடியும் சீன பிரதமர் லீ கெஹியாங்கும் நேற்று தனி யாக சந்தித்துப் பேசிய நிலை யில் இந்த கூட்டறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x