Published : 18 Dec 2020 10:07 PM
Last Updated : 18 Dec 2020 10:07 PM

கரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார் அமெரிக்க துணை அதிபர்

தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்டுத்தும் விதமாக கரோனா தடுப்பு மருந்தை துணை அதிபர் மைக் பென்ஸ் வெள்ளிக்கிழமை பெற இருக்கிறார் என்றும்,. மைக் பென்ஸின் மனைவியும் அவருடன் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வெள்ளை மாளிகையில் மைக் பென்ஸ் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து மைக் பென்ஸ் கூறும்போது, “ கரோனா தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கையை வளர்ப்பதே நோக்கம். இதுவரை எனக்கு எந்த வித்தியாசமான உணர்வும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பைசர் கரோனா மருந்துக்கு அனுமதி அளித்த நிலையில் இன்று மாடர்னா கரோனா தடுப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,31,269பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 3,278 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியர் ஒருவருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x