Published : 17 Dec 2020 01:52 PM
Last Updated : 17 Dec 2020 01:52 PM

கரோனா தடுப்பு மருந்தை மைக் பென்ஸ் பெறுகிறார்: வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் கரோனா தடுப்பு மருந்தை நாளை பெற இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில், “நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்டுத்தும் விதமாக கரோனா தடுப்பு மருந்தை துணை அதிபர் மைக் பென்ஸ் வெள்ளிக்கிழமை பெற இருக்கிறார். மைக் பென்ஸின் மனைவியும் அவருடன் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், அடுத்த வாரம் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்கிறார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,48,686 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,538 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியர் ஒருவருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x