பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 4,47,039 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 4,47,039 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 1,504 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,504 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,039 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,09,329 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,709 பேர் கரோனாவுக்கு பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா தடுப்பு மருந்துக்காக பிலிப்பைன்ஸ் அரசு முக்கிய மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது .

தெற்காசியாவில் இந்தோனேசியாவுக்கு அடுத்து பிலிப்பைன்ஸில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் உள்ளன.

இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால், கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in