Published : 15 Oct 2015 08:30 AM
Last Updated : 15 Oct 2015 08:30 AM
ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் மர்லான் ஜேம்ஸ் (44), இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசை வென்றுள்ளார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் இந்தப் பரிசை வென்றிருப்பது இதுவே முதன்முறை.
இவர் எழுதிய ‘ஏ பிரீப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ்’ என்ற புதினத்துக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இந்திய எழுத்தாளர் சஞ்சீவ் சஹோடாவின் ‘தி இயர் ஆப் ரன்அவேஸ்’ மற்றும் 4 வெளிநாட்டு எழுத்தாளர்களை பின்னுக்குத் தள்ளி ஜேம்ஸ் இந்தப் பரிசை வென்றுள்ளார். லண்ட னில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஜேம்ஸ் கூறும் போது, “இதை என்னால் நம்பவே முடியவில்லை. நாளை காலையில் தூக்கத்தி லிருந்து எழுந்தது இவை எல்லாம் வெறும் கனவாக இருக்குமோ என்று உணர்கிறேன்” என்றார்.
இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து எழுத்தாளர் களுக்கும் தலா ரூ.2.5 லட்சம் கிடைக்கும். பரிசு வென்றவருக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் கிடைக்கும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த புதினங்களுக்கு கடந்த 1969-ம் ஆண்டு முதல் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்டு பிளநாகனினி ‘தி நேரோ ரோட் டு தி டீப் நார்த்’ என்ற நூலுக்கு இந்த பரிசு கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT