Last Updated : 02 Oct, 2015 11:37 AM

 

Published : 02 Oct 2015 11:37 AM
Last Updated : 02 Oct 2015 11:37 AM

ஜம்மு-காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவம் விலக வேண்டும்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்

காஷ்மீர் பகுதியில் இருந்து ராணு வத்தை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

ஐ.நா. பொது சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாலஸ்தீன மக்களும் காஷ்மீர் மக்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். மூன்று தலைமுறைகளாக காஷ்மீர் மக்கள் அடக்குமுறையை சந்தித்து வருகின்றனர். சுயாட்சிக் கான போராட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை தோல்வி அடைந்துவிட்டது. இப் பிரச்சினைக்கு தீர்வு காண பாகிஸ்தான் தரப்பில் நான்கு யோசனைகளை முன்வைக்கிறேன்.

1. கடந்த 2003-ம் ஆண்டு போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் மதிப்பளிக்க வேண்டும். அதன் படி சண்டைநிறுத்தத்தை கண் காணிக்க ஐ.நா. பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

2. எந்தவொரு சூழ்நிலையிலும் இரு நாடுகளும் படை பலத்தை பயன்படுத்துவதோ, மிரட்டுவதோ கூடாது.

3 காஷ்மீர் பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்தை விலக்க வேண்டும்.

4. எவ்வித நிபந்தனையும் இன்றி சியாச்சின் மலைச்சிகரத்தில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை நாங்கள் ஆயுதப் போட்டியை ஊக்குவிக்கவில்லை. நாங்கள் பொறுப்புள்ள அணுஆயுத நாடு. மூன்றாவது முறையாக நான் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப் பேற்ற பிறகு இந்தியாவுடன் நல்லுறவைப் பேண முயற்சி மேற்கொண்டேன். ஆனால் இந்திய தரப்பில் அமைதி முயற்சியை புறக் கணித்துவிட்டனர். தீவிரவாதத் தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். நாங்கள் தீவிரவாதத் துக்கு எதிராக அனைத்து முனை களிலும் போரிட்டு வருகிறோம்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டின் அமைதிப் பணிகளை வரவேற்கிறோம். இதே போல ஆசியாவின் நலனில் ரஷ்யா அக்கறை காட்டுவதும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x