Published : 23 Nov 2020 06:38 PM
Last Updated : 23 Nov 2020 06:38 PM
இந்தோனேசியாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ இந்தோனேசியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 3,000 முதல் 5,000 வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,442 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,21,110 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிகக்ப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானவர்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT