Published : 23 Nov 2020 04:32 PM
Last Updated : 23 Nov 2020 04:32 PM

ரஷ்யாவில் கரோனா தொற்று 21 லட்சத்தைக் கடந்தது: தடுப்பு மருந்து தயாரிப்பில் தென் கொரியாவுடன் ஒப்பந்தம்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,14,502 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,173 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,14,502 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் 85 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று மட்டும் 361 பேர் ரஷ்யாவில் கரோனாவுக்கு பலியாக ரஷ்யாவில் இதுவரை 36,540 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கொரிய அரசுடன் ஸ்புட்னிக்-5 மருந்து உற்பத்திக்கு ரஷ்யா ஒப்பந்தம் போட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x