Published : 16 Nov 2020 02:03 PM
Last Updated : 16 Nov 2020 02:03 PM

நியூசிலாந்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: புதிய சட்டம் அறிமுகம்

நியூசிலாந்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில், புதிய சட்ட விதியை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து ஊடகங்கள் தரப்பில், “நியூசிலாந்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் வகையில், புதிய சட்ட விதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அகுலாந்தில் பொது வாகனத்தில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று செய்தி வெளியானது.

அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா இன்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கரோனாவைத் தடுக்க மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x