பிரேசிலில் கரோனா பாதிப்பு 56,14,258 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா பாதிப்பு 56,14,258 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 23,317 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,14,258ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 23,317 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை 56,14,258 ஆக அதிகரித்துள்ளது. 50,64,344 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் நேற்று மட்டும் கரோனாவுக்கு 609 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை கரோனாவுக்கு 1,61,779 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கரோனாவுக்கு அதிகம் பலி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனாவுக்கு 2 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்குகிறது.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in